காதலியின் சண்டை

புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05 குறள் எண் - 1314 யாரினும் - யாவரினும்; காதலம் - காதலை உடையவராய் இருக்கின்றோம்; ஊடினாள் - ஊடல் கொண்டாள் இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 132, புலவி நுணுக்கம் யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்றுஎன்று பொழிப்பு (மு வரதராசன்): யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள். காத(லியின்)ல் சண்டை என் காதலியின் சண்டைகள் ஏகத்துக்கும் வித்தியாசமானவைகள் என்னவென்று சொல்ல? - ஒரு நாள் எல்லாரையும் விட நாம் இருவரும் எத்தனை அதிகமாய் காதலிக்கிறோம் என்றேன், யார் யாரையெல்லாம் விட என்று கேட்டு சண்டையிட்டாள் என்னைத் தவிரவும் நேசித்திருக்கிறாயோ? என்ற அர்த்தத்தில்... இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!