இடுகைகள்

அழகான மனிதர்கள்

படம்
  அழகான மனிதர்கள் சில கருத்துகள் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபட்டது. என்னோட பார்வையில சரின்னு தோணுறது உங்க பார்வையில தப்பா இருக்கலாம். நான் தப்புனு சொல்றது உங்களுக்கு சரின்னு தோணலாம். சில விசயங்கள நம்மாள நேரடியா இது இதுதான்னு சொல்லிட முடியாது. அது அதபத்தி யார் சொல்றாங்களோ அவங்களோட சூழ்நிலை, அனுபவம், வயசு, குடும்பம்னு எல்லாத்தையும் பொறுத்து மாறுபடும். உங்களவிட ஒருத்தர் சந்தோசமா இருக்கிறத பார்த்து நீங்க ஏங்கிட்டு இருக்கும்போது உங்கள பார்த்து ஒருத்தர் எவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னு நினைக்கலாம். அழகுங்கிறதும் இத மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் மாறக்கூடியதுதான். நிறைய வகையில அழகும் வரையறுக்கப்படுகிறது. நான் இந்த கட்டுரையில அழகைப் பத்தி பேசப் போறது இல்ல. நான் சந்திச்ச சில அழகான மனிதர்கள பத்தி சொல்லப் போறேன். அவங்களோட வெளித்தோற்றம் இந்த அழகான மனிதர்கள்ங்கிற வார்த்தைக்கு ஒருவேளை பொருந்தலாம். இல்ல பொருந்தாம கூட இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி அவங்கள அழகுன்னு என்ன சொல்ல வச்சது அவங்களோட செயல்கள்தான். சம்பவம் நம்பர் ஒன்னு. கொஞ்ச மாசங்களுக்கு முன்னால டூர் போயிருந்தேன். டூர்னா ஷாப்பிங் இல்லாமலா? அப்ப...

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

படம்
  காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..! காதல் தோல்வியான பலர் தாடி வளர்த்துட்டு இருக்கிறத பார்த்திருப்பீங்க. அதனாலயே யாராவது நிறைய தாடியோட இருந்தாங்கன்னா அவங்க கிட்ட “என்னப்பா காதல் தோல்வியா? தேவதாஸ் மாதிரி தாடி வச்சிட்டு இருக்க? ஷேவ் பண்ணலயா?”ன்னு பலர் கேட்குறத பார்த்திருப்பீங்க.நீங்களும் கூட கேட்டிருக்கலாம்..! ஏன் காதல் தோல்வினாலே தாடி வளர்க்குறாங்க..? அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா..? தேவதாஸ் காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னு தாடி வச்சிட்டு தண்ணி அடிச்சிட்டு திரிஞ்சாரு. அதையே எல்லாரும் பின்பற்றுறாங்கன்னு சொல்றீங்களா? சரி தேவதாஸ் ஏன் காதல் தோல்வியை தாடி வளர்த்து கொண்டாடுனாரு? (கட்டுரை முழுக்க ஒரே கேள்விக்குறியா இருந்த மாதிரி இருக்கு… இனிமே முடிஞ்ச வரை பதிலா சொல்ல பார்க்குறேன்…) சமீபத்தில இப்படி ஒரு வாசகத்தை படிச்சேன், “ஒரு ஆண் எப்போ தன்னை நேசிக்க ஆரம்பிக்கிறான்னா, ஒரு பெண் தன்னை நேசிக்கிறாங்கிறது தெரிஞ்சதுக்கப்புறம் தான்’. (இந்த கட்டுரையை ஆரம்பிச்சப்போ என்ன சொல்லறதுக்காக எழுதினேன்னு இப்ப மறந்து போச்சு. கொஞ்சம்தான் ஞாபகம் இருக்கு. ஏன்னா சுமார் 5 மாசத்துக்கு முன்னாடி மேல இருக்கிற வரைக்க...

காதலியின் சண்டை

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05 குறள் எண் - 1314 யாரினும் - யாவரினும்; காதலம் - காதலை உடையவராய் இருக்கின்றோம்; ஊடினாள் - ஊடல் கொண்டாள் இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 132, புலவி நுணுக்கம் யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்றுஎன்று பொழிப்பு (மு வரதராசன்): யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள். காத(லியின்)ல் சண்டை என் காதலியின் சண்டைகள் ஏகத்துக்கும் வித்தியாசமானவைகள் என்னவென்று சொல்ல? - ஒரு நாள் எல்லாரையும் விட நாம் இருவரும் எத்தனை அதிகமாய் காதலிக்கிறோம் என்றேன், யார் யாரையெல்லாம் விட என்று கேட்டு சண்டையிட்டாள் என்னைத் தவிரவும் நேசித்திருக்கிறாயோ? என்ற அர்த்தத்தில்... இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.

படம்
 டாட் - முழுமை இது உண்மையா இல்லை புரளியானு தெரியல. ஆனாலும் கூட எங்கேயோ கேள்விப்பட்ட இந்த விஷயம் எனக்கு கிட்டத்தட்ட உண்மையாத்தான் தெரிஞ்சது. அந்த உண்மையான புரளிய இப்போ உங்களுக்கு சொல்றேன். அது என்னன்னா முகத்துல இடது கன்னத்துக்கு கீழே எந்த பொண்ணுக்கெல்லாம் டாட் இருக்குதோ அவங்க எல்லாம் ரொம்ப அழகா இருப்பாங்க..! இந்த புரளிய இதுக்கு முன்னாடி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? வேணா யோசிச்சு பாருங்க அந்த மாதிரி இடது கன்னத்துக்கு கீழே டாட் இருந்த எல்லாருமே அழகாத்தான் இருந்திருப்பாங்க. அப்படித்தான?  இந்த உண்மையான புரளியோட விளக்கமா எனக்கு ஞாபகம் இருக்கிறத சொல்றேன். கேட்டுக்கோங்க… ஒரு தொடர் எழுதினீங்கன்னா அந்த தொடரோட முடிவில ஒரு புள்ளி வைப்பீங்க இல்லையா? அந்த தொடர் முடிஞ்சிட்டு; முழுமையடைஞ்சிட்டுங்கிறத குறிக்கிறதுக்காக இந்த புள்ளி வைக்கிறோம். அதே மாதிரி இறைவன் படைக்கும்போது அந்த பெண்ணை தன்னோட முழுமையான கற்பனைய பயன்படுத்தி இதுக்கு மேல இந்த பெண்ணுக்கு அழகு சேர்க்கவே முடியாதுங்கிறத குறிக்கிற விதமா அந்த பெண்ணோட இடது கன்னத்துக்கு கீழே டாட் வச்சாராம். அதனால தான் அந்த மாதிரி டாட் இருக்கிறவங்கள்லாம்...

மறந்துவிடு மனமே

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 05 குறள் எண் - 1242 இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 125, நெஞ்சொடு கிளத்தல் இலர் - இல்லாதார்; நோவது - வருந்துவது; பேதைமை - அறியாமை; வாழி - வாழ்வாயாக காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு பொழிப்பு (மு வரதராசன்): என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே. மறந்துவிடு மனமே காதல் அவளிடம் கடுகளவும் இல்லை - உன்னை அகன்ற அவளை எண்ணி அணுவளவும் நோகாதே அறிவுகொள் நீ மனமே! அவள் வரப்போவதில்லை மறப்பாயாக நீ மனமே! முழுதாய் உன்னில் நிறைந்தவளை… இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

காதல் போதை

படம்
  புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 04 குறள் எண் - 1281 இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 129, புணர்ச்சிவிதும்பல் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு பொழிப்பு (மு வரதராசன்): நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. காதல் போதை நங்கை நின்னை  நினைக்கையில் கிடைக்கும் களிப்பும் நின் திருமுகம் கண்ட  நொடியில் நான் கொள்ளும் மகிழ்ச்சியும் நம் காதலைத் தவிர எந்த போதையும் தராதவை..! இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

உயிர் தரும் கனவு

படம்
  புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 03 குறள் எண் - 1213 இன்பத்துப்பால்: கற்பியல், அதிகாரம் 122, கனவுநிலை உரைத்தல் நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். பொழிப்பு (மு வரதராசன்): நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது. உயிர் தரும் கனவு காணாத்தூரம் எனைவிட்டு கண்ணே நீ சென்றபோதும் தொலைந்த இரவுகளில் சிலநாள் தூக்கத்தில் வருமென் கனவினில் மிகஅருகினில் காதலி நீ வாழ்கிறாய் அதனால் நானும் இங்கே அன்பே உயிரோடு இருக்கிறேன்..! இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

அவளது பார்வை

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 02 குறள் எண் - 1091 இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 110 குறிப்பறிதல் உண்கண் - மையுண்ட கண் (மை தீட்டிய விழிகள்) நோக்கு - பார்வை இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து பொழிப்பு (மு வரதராசன்): இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும். அவளது பார்வை மதிமயக்கும் அழகு கொண்ட மங்கை இவளின் மையேந்திய விழிகளில் இருவகை பார்வைகள் உள்ளது ஒன்று காதல் நோய் கொடுக்கிறது ஒன்று அதற்கு மருந்தாய் இருக்கிறது இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க   நோயும் அவளே! மருந்தும் அவளே! வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

நோயும் அவளே! மருந்தும் அவளே!

படம்
நம்ம எல்லாராலயும் 2020-வது ஆண்டை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுக்கு அப்புறம் கேட்டாலும் கூட கொரோனா, ஊரடங்கு, கொத்து கொத்தா மரணம், பயம், வேலை பறிபோனது, வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்ததுன்னு 2020-ம் ஆண்டை பற்றி பக்கம் பக்கமா சொல்லுவோம். ‘என்ன தம்பி! அதவேற ஞாபகப்படுத்திட்டீங்க நெஞ்செல்லாம் புண்ணாருக்குனு’ சொல்றீங்களா? கேட்குது.. கேட்குது… கொரோனா மட்டுமில்ல இந்த உலகம் அம்மைநோய், காலரா, பிளேக் அது இதுன்னு ஏகப்பட்ட நோயை அனுபவிச்சிருக்கு. இப்படி புதுசு புதுசா நோய் பரவும்போது அந்த நோயை கட்டுக்குள்ள கொண்டுவரவும் தொடர்ந்து பரவாம இருக்கவும் நடவடிக்கை எடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அதுக்கு மருந்து கண்டுபிடிப்பாங்க. அப்படித்தான் கொரனாவுக்கும் முடிஞ்ச அளவு வேகமாக தடுப்பூசி கண்டுபிடிச்சு கட்டுக்குள்ள கொண்டுவந்தாங்க. அப்புறம் அது புதுசு புதுசா, தினுசு தினுசா உருமாறி 2-வது அலை, 3-வது அலைன்னு வந்துட்டு இருந்துச்சு. இன்னும் வந்துட்டு இருக்கு. சரி அத விடுங்க! நம்ம திருக்குறளுக்குள்ள வருவோம். திருவள்ளுவர் இந்த குறள்ல ஆதி மனிதன் என்னைக்கு தோன்றினானோ அன்னைக்கு தோன்றின ஒரு நோயை ப...

எனக்கு பிடிக்குமா? பிடிக்காதா?

படம்
திருக்குறள் எனக்கு பிடிக்குமா..? இல்லையா..? ஒரு கவிதையோ, கட்டுரையோ எதுவா இருந்தாலும் நமக்கு பிடிக்குதா இல்லையாங்கிற அது நமக்கு புரிஞ்சாதான் முடிவு பண்ண முடியும். திருக்குறள் நமக்கு பிடிக்காதுன்னு சொல்றத விட நமக்கு அது புரியாத காரணத்தால நாம அந்த முடிவ எடுக்குற இடத்துக்கே போகலங்கிறது தான் உண்மை.  திருக்குறள் ஏன் புரியல..? எனக்கு தெரிஞ்சு தமிழ் இலக்கியங்கள்ல ரொம்பவும் எளிமையான ஒரு இலக்கியம் திருக்குறள் தான். எவ்வளவுக்கு எவ்வளவு குறைஞ்ச சொற்களை பயன்படுத்தி ஒரு திருக்குறள எழுத முடியுமோ அப்படி குறைஞ்ச சொற்களை மட்டும் பயன்படுத்தி வள்ளுவர் திருக்குறளை எழுதிருக்காரு. இருந்தும் ஏன் திருக்குறள் புரிய மாட்டேங்குது அப்படினு கேட்குறீங்களா? எந்த ஒரு இலக்கியமா இருந்தாலும் அதுக்கு நயங்கள் முக்கியம். அதாங்க முதல் எழுத்து ஒன்னுபோல வர்றது (மோனை), இரண்டாவது எழுத்து ஒன்னு போல வர்றது (எதுகை), கடைசி எழுத்து ஒன்னு போல வர்றது (இயைபு) அதுமாதிரி எழுதுறது. இப்படி சில நயங்களுக்காக சில சொற்களை இடமாற்றி வள்ளுவர், திருக்குறளை எழுதிருக்காரு. அதனால தான் திருக்குறள் எளிமையா இருந்தாலும் அத வாசிக்கும்போது நமக்கு புரிய ...

காதல் தீ..!

படம்
புதுக்கவிதை வடிவில் திருக்குறள் 01 குறள் எண் - 1104 இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல் நீங்கின் - நீங்கும் போது; தெறு - சுடு (தெறும் - சுடும்); குறுகுங்கால் - குறுகும்போது, அருகில் வரும்போது; தண் - குளிர்ச்சி; யாண்டு - எங்கு நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டு பெற்றாள் இவள் பொழிப்பு (மு வரதராசன்): நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்? காதல் தீ எவ்வகை தீ இது என்னவளே உன்னிடம் இருப்பது? தூரம் நிற்கையில் சுடுகிறது தொடும் அருகினில் நெருங்கையில் குளிர்கிறது எங்கிருந்து பெற்றாய் என்கண்ணே இந்த காதல் தீயை? இந்த படத்தை பதிவிறக்க பதிவிறக்கு இந்த திருக்குறளின் விளக்க கட்டுரையை படிக்க   காதல் தீ..! வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!